யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி சாருகா, இன்று அவருடைய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருடைய மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை.

சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.

குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப்பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான தொடர்ந்து இடம்பெற்று வரும் மருத்துவபீட மாணவர்களின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பலர் கருதுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.