வலைக்குள் மறைத்து வைக்கப்பட்ட ஐஸ் போதை பொருள் மீட்பு.

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் கடற்கரை பகுதியில் மீன்பிடி படகு ஒன்றினுல் வலைக்குள் மறைத்து வைக்கப்பட்ட 9 கிலோ 735 கிராம் ஐஸ் போதை பொருள் மன்னார் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் கடற்படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள வீரசிங்கவின் பணிப்பில் மன்னார் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் அதிகாரி பொ.ப.மஞ்சுளவின் ஆலோசனையில் தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினரே மேற்படி ஐஸ் போதை பொருளை கைப்பற்றியுள்ளனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வலைப்பின் போது மீன்பிடி படகு ஒன்றினுல் வலைக்குள் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் சந்தேக நபர் நாள்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதை பொருள் இன்றைய மதிப்பில் 80-100 மில்லியன் ரூபா பெறுமதியுள்ளதுடன் மேலதிக விசரணைகளின் பின்னை போதை பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.