20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 1ம்கட்ட தடுப்பூசி.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 95 ஆயிரம் தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

மண்முனை வடக்குப் பிரதேச பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.கிரிசுதன்
மண்முனைவடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 11 கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 1ம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இடங்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 1ம்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று மண்முனை வடக்குப் பிரதேச பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.கிரிசுதன் தலைமையில் 4 இடங்களில் இடம் பெற்றது.இங்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முதலாம் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இன்று தடுப்பூசி எற்றப்பட்டது.

இவ் தடுப்பூசி மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட 3452 தடுப்பூசியானது காலை 9 மணிமுதல் எற்றப்பட்டது.

இதில் மஞ்சந்தொடுவாய் வடக்கு – பாரதி வித்தியாலயம் சத்துருக்கொண்டான் – சார்வோதயா நிலையம் -மண்முனை வடக்கpல் அமெரிக்க மிசன் – விபுலானந்த வித்தியாலயம் கருவப்பங்கேணி ஆகிய இடங்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இன்று 1ம்கட்ட தடுப்பூசி எற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.