தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 491 பேர் சிக்கினர்!

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 491 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 55 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இதுவரை தனிமைப்படுத்தல் சட்டதிவிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 76 ஆயிரத்து 636 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் 160 வாகனங்களில் வந்த 324 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.