மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் விவசாயிகளின் கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்த ஓராண்டு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்புவிடுத்தன. இந்த பேராட்டம், நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், மற்றும் வணிக நிறுவனங்களை மூடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், மருத்துவக் கடைகள், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் தனிப்பட்ட அவசரநிலைகளில் கலந்து கொள்ளும் நபர்கள் உள்ளிட்ட அனைத்து அவசரகால நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். தன்னார்வ மற்றும் அமைதியான முறையில் பந்த் அமல்படுத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் உறுதியளித்துள்ளது. விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்சிங் சன்னி முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார். பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநில அரசுகளும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் ஆர்பாட்டத்தில் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளது. அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், கோவையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று காலை 10.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துகொள்கின்றன.

இதேபோல கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து ஆட்டோக்களும் ஓடாது என்று ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஒரு சில தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை ஓட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர். கோவையில் வழக்கம்போல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் ஓடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைபோல் கடைகள், ஹோட்டல்கள் திறந்து இருக்கும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.