கொரோனாத் தடுப்பூசி ஏற்றியமைக்கான டிஜிட்டல் அட்டை! – முழுப்பாதுகாப்புடன் வடிவமைப்பு.

முழுமையாகத் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டையைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

குறித்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனத் துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக, முழுமையாகத் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட, வௌிநாடுகளுக்குச் செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்காகக் குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் குறியீட்டின் அடிப்படையில் தொடர்புடைய டிஜிட்டல் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நபரும் போலியான அட்டையைத் தயாரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் முழுமையான பாதுகாப்புடன் குறித்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.