வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி தாக்குதல் 5 பேர் பலி.

தலைநகரான ஒஸ்லோவின் தென்மேற்கு நகரான காங்ஸ்பேர்க் நகரில் அந்த நாட்டு நேரப்படி மாலை 6:13க்கு இந்த தாக்குல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வேயின் காங்ஸ்பெர்க்கில் உள்ள ஒரு மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சுப்பர்மார்க்கெட்டில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகிறன. சம்பவத்தையடுத்து மக்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.