பக்தி பூர்வமாக இடம்பெற்ற மாவட்ட செயலக வாணி விழா!

முல்லைத்தீவு மாவட்ட செயலக வாணிவிழா நிகழ்வுகள் இன்று(15) காலை மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செலயக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய பூஜை வழிபாடுகள் நவதானிய பூரண கும்ப சரிவுடன் நினறவு பெற்றது.

இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு வித்தியாரம்பம் (ஏடு தொடக்கல்) நிகழ்வும் இடம்பெற்றது.

குறித்த பூஜை வழிபாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வருடம் கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக பூஜைக்குரிய கிளை உத்தியோகத்தர்கள் மட்டும் கலந்து கொள்ளக்கூடியதாக முறையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஒன்பது நாட் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று இன்றைய இறுதிநாள் வாணி விழாவானது கலைநிகழ்ச்சிகள் இன்றி பூஜை வழிபாடுகளுடன் மட்டும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.