நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு கொரோனா!

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் உயிரிழந்த 24 வயது யுவதி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு ஊடாக பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட குறித்த உயிரிழந்த பெண்ணின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர் R.றஜீவனா (வயது-24) என மருத்துவ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.