தவறான முடிவால் இளைஞன் உயிர்மாய்ப்பு.

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட தண்ணீரூற்று கிழக்கு பகுதியில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 19 அகவையுடைய இளைஞன் ஒருவன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தண்ணீரூற்று கிழக்கு முள்ளியவளையினை சேர்ந்த 19 அகவையுடைய பாணுகாந் என்ற இளைஞனே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞன் நேற்று இரவு வீட்டின் அறைக்குள் தாயின் சோலால் கழுத்தில் இறுகி தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ வீட்டிற்கு விரைந்த முள்ளியவளை பொலீசாரும் தடையவியல் பொலீசாரும் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் உடலம் பிரோத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இளைஞனின் உயிரிழப்பு கிராமத்தில் சோகத்தினை ஆழ்த்தியுள்ளது தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்கும் இளைஞர்கள் இந்த உலத்தில் ஒருமுறைதான் நாங்கள் பிறப்போம் என்பதை மறந்துவிடாதீர்கள் கஸ்டங்கள் சோதனைகள்,வேதனைகள்,தோல்விகள் எல்லாம் மனித வழ்வில் இயல்பு எல்லாவற்றையும் கடந்து செல்லவே இந்த மனித பிறப்பை இறைவன் படைத்துள்ளான்.

இதனை சரியாக புரிந்து கொண்டு ஒவ்வொரு இளைஞர்கள் யுவதிகள் செயற்படவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.