அரசாங்கத்தின் அனுமதியின்றி பேருந்து கட்டணத்தை அதிகரிப்போம்.

நாட்டில் லங்கா IOC எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் அனுமதியின்றி பேருந்து கட்டணத்தை அதிகரிப்போம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

லங்கா IOC நேற்றிரவு டீசல், பெற்றோலின் விலையினை 5 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை லீற்றருக்கு ரூ .162 ஆகவும் ஒரு லீற்றர் டீசல் முதல் 116 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

எனினும் எரிபொருள் விலையை உயர்த்தக்கூடாது என்ற அரசாங்கத்தின் முடிவின் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலையை அதிகரிக்கவில்லை என நிதி அமைச்சின் மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.