இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ள அரச மருந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்.

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்வுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத் துள்ளதாகவும் அவரது கடிதத்தை ஜனாதிபதி ஏற்றாரா இல்லையா என்றும் தற்போது வரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த இராஜினாமாவானது உடல் நலக்குறைவு மற்றும் சில தனிப்பட்ட காரணத்திற்காக அவர் எடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.