இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன்.

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

அதற்கமைய ,15 இலட்சம் லீட்டர் திரவ உரம் அடுத்த வாரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் ,எதிர்வரும் 2 வாரங்களில் கிடைக்கப்பெறவுள்ள உரத் தொகையுடன் இலங்கையில் நெல் பயிர்ச்செய்கைக்கு தேவையான முதலாவது நனோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதி போதுமானதாக இருக்கும் என வசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.