தூத்துக்குடியில் தந்தையிடம் புதிய பைக்கினை காண்பிக்க வந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்!!

தந்தையிடம் புதிய பைக்கினை காண்பிக்க வந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன் கோவில்பட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற புலிப்பாண்டி. இவருக்கு இரண்டு மகள்கள் மூன்று மகன்கள். மூத்த மகன் முனியசாமி (51). இவருக்கு சிறிது மனநிலை பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2வது மகன் செல்லத்துரை (50) திருமணம் முடித்து சென்னையில் வசித்து வருகிறார். 3வது மகன் முருகன் (45) திருமணம் முடித்து ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் மகள்கள் கற்பகம் (40), பாக்கியலட்சுமி (38) ஆகியோர் திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகிறார்கள்.

புலிப்பாண்டி தனது மூத்த மகனான முனுசாமிக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால் சொத்துக்களை மற்ற இரண்டு மகன்களுக்கு மட்டும் எழுதி வைத்துள்ளார். இதன் காரணமாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகன் தான் புதிதாக வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை தனது தந்தையிடம் காண்பிக்க தெற்கு பொம்மையாபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். ஸ்கூட்டரை காண்பித்து விட்டு இரவு நேரமாகி விட்டதால் தனது தந்தையின் வீட்டில் தனது மூத்த சகோதரர் முனியசாமியுடன் தங்கியுள்ளார்.

அவரது தந்தை மற்றொரு வீட்டில் தூங்கியுள்ளனார்.இந்நிலையில் நள்ளிரவில் கட்டிலில் தூங்கி கொண்டு இருந்த தனது தம்பி முருகனை, முனியசாமி வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி படுகொலை செய்து விட்டு, பசுவந்தனை காவல் நிலையத்திற்கு சென்று முனியசாமி சரண் அடைந்து, தனது தம்பியை வெட்டி கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் படுகொலை செய்யப்பட்ட முருகன் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முனியசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணையில் தனக்கு தந்தை சொத்து தரமால் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்தார். தம்பி முருகன் ஸ்கூட்டர் வாங்கி வந்து தந்தையிடம் காண்பித்தது ஆத்திரத்தினை ஏற்படுத்தியது. தனக்கு எதுவும் தராமல் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. தம்பி முருகனிடம் கேட்ட போது, உனக்கு தான் குடும்பம் எதுவும் இல்லை உனக்கு சொத்து எல்லாம் எதுக்கு என்று கூறியதால் ஆத்திரத்தில் இருந்தேன். நேற்று முருகன் தனியாக இருந்ததால் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக முனியசாமி கூறியுள்ளார்.

மேலும் தனது தம்பியை கொலை செய்து விட்டு, குளித்து விட்டு ஹாயாக சென்று முனியசாமி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதற்கிடையில் சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள முனியசாமியிடம் விசாரணை நடத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.