16 வயதுச் சிறுவன் செலுத்திய சொகுசு கார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயம்.

இச்சம்பவம் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது. காயடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதிசொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு உந்துருளிகளையும், முச்சக்கரவண்டியொன்றையும் கார் ஒன்றையும் மோதி குடைசாந்தது.

சிறுவன் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த வீதியை விட்டு விலகி விபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் யணித்த ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை, அவருடன் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.