இடைப்போக நெல் அறுவடை விழா!

மட்டக்களப்பு கடுக்காமுனையில் மூன்றாம் போக நெல் அறுவடை விழா கடுக்காமுனை கமநல அமைப்பின் தலைவர் தி.ருதாகரன் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

கடுக்காமுனை வில்லுக்குளத்து நீரனை பயன்படுத்தி இடைப் போகத்தினை மேற்கொள்வதற்கு இப்பகுதி விவசாயிகளுக்கான அனுமதியினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பெற்றுக்கொடுத்தமையினைத் தொடர்ந்து இம்முறை 95 ஏக்கர் செய்கை பண்னப்பட்டமையினால் அப்பகுதியை சேர்ந்த 63 விவசாய குடும்பங்கள் நன்மையடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் செய்கைபண்னப்பட்ட வயல்களை அறுவடை செய்யும் விழாவிற்கு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், அறுவடையினையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.