தீவகத்தில் இன்று மூன்று இடங்களில் காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு.

யாழ்ப்பாணம் மாவட்டம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்று இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் அல்லைப்பிட்டி ஜே/10 கிராமசேவகர் பிரில் 7 பரப்புக் காணியும், மண்கும்பான் ஜே/11 கிராமசேவகர் பிரிவில் 8 பரப்புக் காணியும் மற்றும் புங்குடுதீவு ஜே/24 கிராமசேவகர் பிரில் 14.2 ஏக்கர் காணியும் கடற்படையினருக்குச் சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் நில அளவைத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவிருந்தது.

இருப்பினும் குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டுச் செல்வதாக கூறிவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் அவ்விடத்தில் இருந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.