வீதிக்கு உரிய நடவடிக்கை வேண்டும் எனக் கோரிக்கை போராட்டம்.

இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைப்படுத்தும் தெருவை தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்துக்குள்ளால் தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டை மிகுந்த சிரமத்தின் மத்தியில் மேற்கொள்கின்றனர்.

இடுப்பளவுக்குள்ளான குளத்து நீரிற்குள்ளாக பாடசாலைக்குச் செல்லும் துன்பியலான நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திவரும் இவ் வீதியை தனியார் சிலர் அது தமது காணி எனத் தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியை அடைத்துள்ளனர்.

இதன் பிரகாரம் தனியார் காணி உரிமையாளர்கள் வீதியை மறித்தும் குளத்தின் ஒரு பகுதியை இணைத்தும் தமது எல்லையை இட்டுள்ளனர்.

இதனால் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் பாரிய வெள்ளத்தின் மத்தியில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இவ் வீதியானது சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் இம் மக்கள் தமது நிலையைக் காண்பிக்க கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.