தொடர்ச்சியாக சமையல் எரிவாயு சிலின்டர் வெடிப்புகள் : யாழ்ப்பாணத்திலும் இன்று வெடித்தது

தொடர்ச்சியாக இடம்பெறும் சமையல் எரிவாயு சிலின்டர் வெடிப்புகளின் தொடர்ச்சியாக,
முதலாவது இன்றைய தினம் (28) புத்தளம், ஆராச்சிக்கட்டுவ, வீரன்கட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவாகியுள்ளது.

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ, வீரன்கட்டுவ பகுதியில் இன்று (28) பிற்பகல் 2 மணியளவில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிந்து கொண்டிருந்த காஸ் சிலிண்டரை வீட்டில் இருந்து வெளியே எடுத்துச் சென்று தீயை அணைத்துள்ளனர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

2வது கேகாலை, கஹடபிட்டிய, ரொக் ஹீலில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவாகியுள்ளது.

இன்று காலை தேநீர் அருந்துவதற்காக நீரை சூடாக்குவதற்காக அடுப்பை இயக்கிவிட்டு வீட்டின் உரிமையாளர் இன்னுமொரு அறைக்குச் சென்ற சந்தர்ப்பத்திலேயே சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

3வது யாழ்.சுன்னாகம் – சந்தரோடை பகுதியிலும் இன்று எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியிருக்கின்றது.

கந்ரோடையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது , எரிவாயு சிலிண்டர் வீட்டுக்கு வெளியில் இருந்தமையினால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவங்களில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.