ஜெர்மனியில் கொரோனா 4-வது அலைக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் டிசம்பர் மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. ஆனால், தற்போது இருந்தே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரம் தொடங்கிவிட்டது.

அந்த வகையில் ஜெர்மனியில் கொரோனா 4வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் கோலாகலமாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பரிசளித்து மகிழ்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.