இந்து சமுத்திர மாநாட்டுக்கு ரணிலுக்கும் வந்தது அழைப்பு!

இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எம்.பிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

5ஆவது இந்து சமுத்திர மாநாடு எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை அபுதாபியில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கே ரணிலுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்கும் ரணில் விக்கிரமசிங்க டிசம்பர் 5 ஆம் திகதி உரையாற்றுவார்.

2016 – 2019 காலப்பகுதியில் குறித்த மாநாட்டின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.