வவுனியா வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு.

வவுனியா, வேரகம அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (01) எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேஸ் அடுப்பு வெடித்த வீட்டில் இருந்த இல்லத்தரசி கேஸ் அடுப்பில் சமையல் செய்துவிட்டு ​​கேஸ் அடுப்பினை நிறுத்தி வைத்தததன் பின்னர் திடீரென தீப்பிடித்து கேஸ் அடுப்பு ஒளிவிட்டு வெடித்ததாகவும் கூறினார். கேஸ் அடுப்பு தீ பற்றி எரியும் போது அயலவரை அழைத்ததாகவும் மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க கேஸ் சிலிண்டரிலிருந்து ரெகுலேட்டரை அகற்றியதாகவும் இல்லத்தரசி கூறினார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.