சியால்கோட் வர்த்தக சமூகம் பிரியந்தவின் குடும்பத்துக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் உதவி

பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு நிதி திரட்டிக் கொடுக்க சியால்கோட்டில் உள்ள வர்த்தக சமூகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக Mir Mohammad Alikhan டியுட் செய்துள்ளார்.

இதுவரை நிதியாக 100,000 (ஒரு லட்சம்) அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரியந்த குமாரவின் மாதாந்த சம்பளத்தை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் இது நல்லதுதான், ஆனால் பிரியந்தவை மீண்டும் கொண்டு வர முடியாது. குற்றவாளிகளுக்கு மன்னிக்க முடியாத தண்டனை ஒன்றை வழங்குவதன் மூலம் , ,இப்படியான குற்றச் செயல்கள் இடம் பெறாமல் இருக்க முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.