அம்பாறை மாவட்ட பொது மருத்துவமனையின் இதயநோய் பிரிவை நிறுவுதல்….

அம்பாறை மாவட்டத்தில் இதயநோய்களுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் இதயநோயால் இறக்கின்றவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் படிப்படியாக அதிகரித்துள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, சிகிச்சை பெறுவதற்கு சமூகமளிக்கும் இதய நோயாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் சத்திரசிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக அம்பாறை பொது மருத்துவமனையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேவை காணப்படுகின்றது.

அதற்கமைய, அம்பாறை பொது மருத்துவமனையின் நீர்மமேற்று ஆய்வுகூடத்துடன் (Catheter Laboratory ) கூடிய இதயநோய் பிரிவொன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை தயாரித்து, நிர்மாணித்து, ஒப்படைத்தல் எனும் அடிப்படையில் பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.