யாழில் வீட்டின் மேல்தளத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி.

யாழ்.தொல்புரத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொன்றிந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் என்னும் 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் குறித்த சிறுவன், தனது வீட்டின் மேல் தளத்தில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டு இருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.