ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் – திருப்பதியில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதி!

ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்ட காரணமாக திருப்பதி திருமலையில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் 4000 மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு பிரிவினர் தேவஸ்தான கட்டுப்பாட்டிலும், மற்றொரு பிரிவினர் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊழியர்களின் நலனுக்காக தேவஸ்தானம் சார்பில் பணியாளர் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதில் தேவஸ்தான ஊழியர்கள் மட்டுமே உறுப்பினராக உள்ளனர்.

இதில் தங்களையும் சேர்க்க வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு உள்ள அறைகளை பராமரிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.