நாளை (20) 5 மாவட்டங்களில் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ….

ஐந்து மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் நாளை (20) 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பணிப்புறக்கணிப்பு தீவிரமடைந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இடமாற்ற சபையின் அனுமதியின்றி வைத்தியர்களை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 8.00 மணிக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வேலை நிறுத்தம் இருந்தாலும் அவசர சேவைகள் செயல்படும்.

Leave A Reply

Your email address will not be published.