பசில் ராஜபக்ஷ பிரதமராவார்? சீனா, இலங்கையை கையகப்படுத்தும் : விஜயதாச ராஜபக்ஷ

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக  பி.பி.ஜயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகளை தாம் பலமுறை அம்பலப்படுத்தி வந்த போதிலும், அவருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும், திரு. பசில் ராஜபக்ஷவின வேண்டுகோளுக்கு இணங்கி இன்று ஜனாதிபதியின் செயலாளராகியுள்ளார் என விஜேதாச ராஜபக்ஷ  தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கும் பல ஊழல் மோசடிகள் உள்ளன, சிஐஏ உளவாளி ஒருவருக்கு கப்ரால்   பொது வரிகளில் இருந்து எந்தவித அனுமதியும் இன்றி சம்பளத்தை செலுத்தியதாக அவர் கூறினார்.

அதன்படி பி.பி.ஜயசுந்தர மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றார்.

தற்போதைய சூழ்நிலையில் பசில் ராஜபக்ஷ எதைக் கோரினாலும் அதனை நிறைவேற்றும் நிலையில் ஜனாதிபதி இருப்பதாக விஜயதாச ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

அதன்படி பசில் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக விஜயதாச ராஜபக்ஷ கூறுகிறார்.

தேங்காய் பறிக்கும் தொழிலாளியிடம்  தனது அலுவலக வேலைகளை செய்ய ஒப்படைத்தால், அவரால் முடியாது என்பது போல, பசில் ராஜபக்சவுக்கு நிதியமைச்சர் பதவியையோ அல்லது பிரதமர் பதவியையோ சரிவர நிறைவேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு , சீனாவின் முன் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளதாகவும் எதிர்காலத்தில் சீனா இலங்கைக்கு கடனை வழங்கி கடனை செலுத்த முடியாமல் போகும் போது முழு நாடும் சீனா கையகப்படுத்தும் எனவும் திரு விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

உலக வல்லரசாக கனவு காணும் சீனா, எதிர்காலத்தில் இலங்கையை யுத்த மூலோபாய மையமாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளது  என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இணைய சேஊடகமொன்றில்  இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.