யாழில் மூச்சுத் திணறலால் மூன்றரை மாத ஆண் குழந்தை மரணம்!

யாழ்ப்பாணத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாத ஆண் குழந்தை பரிதமாக உயிரிழந்துள்ளது.

இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குழந்தை காலை 6 மணியளவில் திடீரென மூச்சடங்கிக் காணப்பட்டது .

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் குழந்தை உயிரிழந்துள்ளது என மருத்துவ அறிக்கையிடப்பட்டது .

மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.