மக்களின் இரத்தத்தை உறிஞ்சுபவர் இரத்தப்போக்கு ஏற்பட்டே மரணிப்பர்!

“மக்களின் இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் இரத்தப்போக்கு ஏற்பட்டே மரணிப்பார்கள்.”

இவ்வாறு ஐக்கிய பிரஜைகள் ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த இரு தினங்களுக்குள் அரசிலுள்ளவர்கள் உட்கொண்ட உணவு தொடர்பான விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

அரசில் சுவாசிப்பவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் உட்கொண்ட உணவுகள் சமிபாடு அடையுமா என்றே கேட்க விளைகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.