மீண்டும் ரஜினி கமலுக்கு போட்டியாக களத்தில் இறங்கும் மைக் மோகன்.

90 காலகட்டங்களில் மக்களின் ஃபேவரிட் ஹீரோவாக வலம் வந்தவர் மோகன். ரஜினி கமலை விட அப்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வலம் வந்தவர் மோகன் தான். இவர் பெரும்பாலான படங்களில் மைக்கை கையில் வைத்துக்கொண்டு பாடுவதால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இவரது படங்கள் பெரும்பாலும் யதார்த்தமாக இருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்திழுத்தது வந்த காரணத்தினால் இவரது திரைப்படங்கள் குறைந்தது 100 நாட்களை எல்லாம் கடந்து அசால்டாக அப்போதைய காலகட்டத்தில் ஓடியது மேலும் தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் மட்டும் தொடர்ந்து 17 படங்களில் நடித்து பிசியான நடிகராக மாறினார்.

இதுவரை ரஜினி கமல் கூட அந்த அளவுக்கு பிஸியாக நடித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகனாக இருந்த மோகன் ஒருகட்டத்தில் வயசு ஏற ஏற இவருக்கு ஹீரோ என்ற அந்தஸ்தை கிடைக்காமல் போனது இதனால் அவர் சினிமாவில் நடிக்காமல் போனார்.

இவர் கடைசியாக சுட்ட பழம் என்ற திரைப்படமே கடைசி படமாக அமைந்தது இந்த படம் ரசிகர்களை பெரும் அளவில் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தெலுங்கு பக்கத்தில் மட்டும் 2016ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து ஐந்து வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த மைக் மோகன் தற்போது தாதா 87 என்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி என்பவருடன் கைகோர்த்து மோகன் ஒரு புதிய படத்தில் இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெகு விரைவிலேயே வர இருக்கிறதாம்.

Leave A Reply

Your email address will not be published.