டெல்லியில் கொரோனா அதிகரிக்கிறது.. மக்கள் பீதியடைய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை

டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனினும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை, லேசான பாதிப்புதான் ஏற்படுகிறது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவலும், ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துப்பின் இந்தியாவில் கொரோனா தொற்று 27ஆயிரத்தை எட்டியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பும் 1500க்கும் மேல் உயர்ந்துவிட்டது.

டெல்லியிலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி டெல்லியில் 2,716 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், இதில் 247 பேருக்கு மருத்துவமனை அனுமதி தேவைப்பட்டது. இது டிசம்பர் 30ம் தேதியோடு ஒப்பிடுகையில் 100பேர் கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர், மருத்துவமனை தேவையும் 20 பேருக்கு மேல் அதிகரித்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று நாட்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.

எனினும், ஒமைக்ரான் பரவல் அச்சம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றாலும், பாதிக்கப்படுவோருக்கு லேசான அறிகுறிகள்தான் காணப்படுகின்றன, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதும் குறைவு. ஆதலால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் ஒரு சதவீதம் மட்டுமே நோயாளிகள் இருக்கிறாரகள், 99 சதவீதம் காலியாகவே இருக்கின்றன. கடந்த 2-வது அலையோடு ஒப்பிடுகையில் ஒமைக்ரானால் பாதிப்பு குறைவுதான். அதேபோல், டெல்டாவை விட ஒமைக்ரான் தொற்று மிதமானது தான். ஆனாலும் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், சோப்புடன் கைகளைக் கழுவவும், கவலைப்பட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

கடந்த டிசம்பரம் 29ம் தேதி 2000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 1ம் தேதி 6 ஆயிரமாக அதிகரி்த்துள்ளது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 262லிருந்து 247ஆகக் குறைந்துள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.