ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் 17 ஆவ‌து வ‌ருடாந்த‌ மாநாடு.

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் 17 ஆவ‌து வ‌ருடாந்த‌ மாநாடு, எதிர்வ‌ரும் 15 ஆம் திக‌தி (ச‌னிக்கிழ‌மை) க‌ல்முனையில் ந‌டைபெற‌வுள்ள‌து.க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையில் ந‌டைபெற‌வுள்ள‌ இந்த‌ தேசிய‌ மாநாட்டுக்கு, நாட்டின் பிர‌தான‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் இருந்து க‌ட்சியின் பேராள‌ர்க‌ள் க‌ல‌ந்து கொள்ள‌வுள்ள‌ன‌ர்.

நாட்டின் நிலைமையினைக் க‌ருத்திற் கொண்டு, ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ எண்ணிக்கையுட‌ன் ந‌டைபெற‌விருக்கும் இம்மாநாட்டுக்கு, ப‌ல‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளும் அழைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.
க‌ட்சியின் கொள்கை ப‌ர‌ப்புச் செய‌லாள‌ர் எம்.எஸ்.எம். ச‌ப்வானின் வ‌ர‌வேற்புரையுட‌ன் ஆர‌ம்பிக்கும் இம்மாநாட்டில், க‌ட்சிக்காக‌ அரும் ப‌ணியாற்றியோருக்கான‌ விருதுக‌ள் மற்றும் புதிய‌ இணைப்பாள‌ர்க‌ளுக்கான நிய‌ம‌ன‌க் க‌டித‌ங்க‌ள் என்பனவும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வுள்ள‌ன‌.”ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி” என்ப‌து 2005 ஆம் ஆண்டு முத‌ல் “உல‌மா க‌ட்சி” என்ற‌ பெய‌ரில் இய‌ங்கி வ‌ந்த‌துட‌ன், க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் “ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி” என‌ பெய‌ர் மாற்ற‌ம் செய்யப்பட்டமை குறிப்பிட‌த்த‌க்க‌து.

Leave A Reply

Your email address will not be published.