கொரோனா தொற்று : கல்முனை காணி பதிவகம் இழுத்து மூடப்பட்டது.

8 கொரோனா தொற்றாளர்கள் கல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் இனங்காணப்பட்டதை அடுத்து , எதிர்வரும் ஜனவரி 22 திகதி மறுஅறிவித்தல் மூடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள மேற்படி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் பரிசோதனையில் இவ்வாறு 8 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.
சுமார் 31 உத்தியோகத்தர்களிடம் இன்று(13) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது இவ்வாறு 8 பேர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா அனர்த்தம் இலங்கையில் பரவல் அடைந்த பிற்பாடு இக்காணி பதிவகத்தில் 3 ஆவது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.