சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்….

இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் ஒத்திகை நிகழ்வுகளுக்கான போக்குவரத்து திட்டம் ஒன்றை பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (29) முதல் பிப்ரவரி 3ம் திகதி வரை தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும்.

அதேபோல், தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 6 மணி முதல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதன்படி, மேற்படி நேரங்களில் கொழும்பை அண்மித்துள்ள கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீதிகளில் போக்குவரத்து அவ்வப்போது மட்டுப்படுத்தப்படும்.

Leave A Reply

Your email address will not be published.