நேபாளத்தில் காலணி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நேபாள நாட்டின் டாங் மாவட்டத்தில் துளசிபூர் நகரில் காலணி கடை ஒன்று அமைந்து உள்ளது. இந்நிலையில், கடையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் 15 வயதுக்கு உட்பட்ட 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர். தீ விபத்தில் 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

அவர்கள் சஜிதா கட்டூன் (வயது 13), ஹசன் பக்ஷ் (வயது 14), மசின் பக்ஷ் (வயது 15), நஜாருதீன் அலி (வயது 40) மற்றும் அபிதீன் அலி (வயது 5) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.