கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதல் இடத்தில் அமெரிக்கா.

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி வைரசான கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அங்கு 9½ லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொரோனா பறித்துள்ளது.

இந்த கொடிய வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த அவசர நிலை அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதியுடன் முடிவுக்கு வர இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலையை மேலும் நீட்டித்து ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் அமெரிக்காவின் பொதுசுகாதாரம் மற்றும் தேசத்தின் பாதுகாப்புக்கு தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மார்ச் 1, 2022-க்கு பின்னரும் அவசர நிலை தொடர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.