வெள்ளியன்று டில்லி பறக்கின்றார் பஸில் நிதி அமைச்சின் செயலரும் பயணம்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இந்தியா செல்லவுள்ளனர்.

இந்தியாவில் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான பேச்சுகளை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் அங்கு செல்கின்றனர்.

இதற்கு முன்னரும் பஸில் இந்தியா சென்று, அந்நாட்டின் நிதி அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.