இன்று மகா சிவராத்திரி தினம்…

இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்

வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அதன்படி ,இந்த நாளின் சிறப்பு குறித்து கந்தபுராணம் மற்றும் அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்களில் குறிப்பிப்பட்டுள்ளது.

சிவராத்திரியன்று சிவனை வழிபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.

சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

மேலும் ,24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி பெற்று முத்தியை அடையலாம் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.