மஹிந்த குடும்பத்தினர் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகத் தயார்! இன்று இரவு இறுதி முடிவு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தவிர்த்து ராஜபக்ச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அமைச்சரவையை நியமித்து அரசாங்கத்தை தொடர்வதே அரசாங்கத் தலைவர்களின் திட்டமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான இறுதி முடிவு இன்று மாலையில் எடுக்கப்படும் எனத் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.