ஆட்சி அமைக்க சஜித்துக்கு அழைப்பு! ஆணையை நினைவூட்டிய சஜித்!

புதியதொரு அரசாங்கத்தை அமைக்குமாறு அரசாங்கத் தலைவர் ஒருவரிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

ஆணை இன்றி நாடாளுமன்றத்தின் தலைகளை மாற்றி ஆட்சி அமைக்க மாட்டோம் என அவர் அரச தரப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் காபந்து அரசாங்கமோ அல்லது இடைக்கால அரசாங்கமோ அமையும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதில் அமைச்சுப் பதவிகளையோ பொறுப்புக்களையோ ஏற்க மாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.