இந்த சிலை மட்டும் உங்கக்கிட்ட இருந்தா சக்கரவர்த்தியா இருப்பிங்க… சதுரங்க வேட்டை மோசடி அம்பலமானது எப்படி?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் 72 வயதான கருப்பையா .இவரது மருமகன் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 44 வயதான அப்பாசேட். இவர் மந்திர வேலைகள் மற்றும் பில்லி சூனியம் , சித்து விளையாட்டு என போலியாக ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்நிலையில் கரூர் பகுதியை சேர்ந்த 43 வயதான ராஜா என்பவர் அப்பாசேட்டிடம் குறி கேட்க வந்துள்ளார். அவரிடம் உங்கள் ஜாதகம் உச்சம் தொடவேண்டும் என்றால் வீட்டில் நவபாஷான விநாயகர் சிலையை வைத்த வழிபடவேண்டும் என்று சொல்லியுள்ளார்.

அத்துடன் உண்மையான நவபாஷான சிலையை பாலால் அபிஷேகம் செய்தால் பச்சை நிறத்தில் மாறும் அந்த பாலை நீங்கள் குடிக்க வேண்டும் என்றும் ஏகபோகத்திற்கு அளந்து விட்டுள்ளார். இதை நம்பிய ராஜா ,குறி சொல்லிய அப்பாசேட்ட்டிடமே தனக்கு நவபாஷான சிலையை ஏற்பாடு செய்து தரகூறியுள்ளார். இது தான் வாய்ப்பு என்று தான் போலியாக தயார் செய்து வைத்திருந்த சிலையை காட்டி இது தான் நவபாஷான சிலை என்று சொல்லியுள்ளார். அத்துடன் இதன் விலை ரூ 13 லட்சம் என்றும் உடனே தொகையை கொடுத்தால் தான் விநாயகரை கையில் ஒப்படைக்கமுடியும் என்றுள்ளார்.

அப்பாசேட்டின் பேச்சில் சந்தேகமடைந்த ராஜா வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரையடுத்து அப்பாசேட்டை பிடித்த போலீசார் அவரிடம் இருந்த போலி நவபாஷான விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கருப்பையாவை போலீசார் தேடிவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.