யாழில் அதிர்ச்சி! – பல்கலை மாணவி சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரியவருகின்றது.

உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்த 22 வயதுடைய சிந்துஜா என்றும், இவர் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என்றும் தெரியவந்துள்ளது.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.