கண்ணீர்ப் புகை குண்டுகளால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை..!

கண்ணீர்ப் புகை குண்டுகளில் உள்ளடங்கியுள்ள இரசாயனங்கள் சுவாசக் கோளாறு, கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துவதாக இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது.

அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் மக்களுக்கு எதிராக சட்ட அமுலாக்க துறையினர் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கண்ணீர்ப் புகையில் உள்ள இரசாயனங்கள் சுவாசக் கோளாறுகள், கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.