ஸ்ரீலங்கன் எயார் லைன்சின் திடீர் தீர்மானம் – 1000 பேர் பணி நீக்கம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் உதவி ஊழியர்களாக பணிப்புரிந்த சுமார் ஆயிரம் பேரை தற்காலிக பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிந்த 400 பேர் மற்றும் நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட வேறு நிறுவனங்களில் பணியாற்றிய 600 பேர் இவ்வாறு தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணி புரியும் உயர் அதிகாரிகளின் சம்பளத்தில் 25 வீதத்தினை நிறுத்தி வைப்பதற்கான தீர்மானத்தில் அனைத்து தொழிற்சங்கங்களினதும் இணக்கம் பெறப்பட்டுள்ளது.

இவ்விரு தீர்மானங்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.