ரணிலால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் அவரை வீழ்த்துவதற்கு வேறு யாரும் தேவையில்லை

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்துடன் உலக சாதனை படைத்துள்ளார்.ரணிலின் நியமனம் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.சமீபத்தில் அரசியல் நியமனம் பற்றி கத்தோலிக்க ஆயர் மெல்கம் ரஞ்சித் இவ்வளவு விசனமாக பேசுவதை நாம் கேட்டதில்லை.அது அவரது தனிப்பட்ட கருத்தா அல்லது கத்தோலிக்க ஆயர் பேரவை உட்பட ஒட்டுமொத்த இலங்கை கத்தோலிக்க சமூகத்தின் குரலா எனத் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் இது ஒரு சதி என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் புதிய முதலாளித்துவத்தில் தோன்றிய குவேர உயரடுக்கிற்கும் , ரணில் விக்கிரமசிங்கவிற்கும் உள்ள தொடர்பு எப்படியானது என தெளிவாக தெரியவில்லை. ஆனால் புதிய பிரதமர் எதிர்கொள்ளும் உண்மையான சவால்கள் இவையல்ல.

நம் நாட்டில் இன்னும் எரிவாயு இல்லை. எரிபொருள் இல்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரத் தட்டுப்பாடு இன்னும் அப்படியே உள்ளது. இவை அனைத்தும் அவர் எதிர்கொள்ளும் உண்மையான சவால்கள்.

மேலும், கருவூலத்தில் டாலர் கையிருப்பு $50 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது. நாட்டுக்குத் தேவையான ஒரு பொருளைக் கூட இறக்குமதி செய்ய அது போதாது.இவ்வாறு அனைத்துச் சூழ்நிலைகளிலும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குப் புதிதாக பணம் அச்சிடப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கெல்லாம் தீர்வு காண பிரதமருக்கு நிலையான அரசு தேவை. பிரதமருக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்ளாவிட்டாலும் தேவைப்படும் போது அரசாங்கத்தைப் பாதுகாப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறுகிறது. 11 கட்சிகள் கொண்ட குழு தற்போது 10 ஆக உள்ளது, புதிய பிரதமருக்கு ஆதரவளிக்கப்போவதில்லை, நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயங்களில் அவருக்கு ஆதரவளிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பசில் ராஜபக்ச டைகோட் அணிந்திருப்பது போன்ற சித்திரங்கள் மற்றும் சித்தரிப்புகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.இதேவேளை தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தேவைப்படும் போது அவருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜாதிக ஜன பலவேக ஆகிய கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள்.

அதையும் மீறி ராஜித சேனாரத்னவும் ஒரு குண்டைப் பற்றவைத்தார். அதாவது எம்.பி.க்கள் அரசாங்கத்தில் சேர பணத்துடன் சிலர் அலையும் காலம் வந்துவிட்டது. ஒரு எம்பியின் மதிப்பு 1000 லட்சம் என்கிறார். இதனை ‘முதலை 2’ நாடகம் என சமூக ஊடகங்கள் வர்ணித்திருந்தன. முன்னைய தேர்தல் கால பரப்புரையான முதலை விவகார வழக்கின் இறுதியில் ராஜித சேனாரத்னவின் பணத்தை எடுத்துக்கொண்டு இவ்வாறு கூறியதாக கைதான இருவரும் தெரிவித்தனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ராஜித சேனாரத்ன இந்த பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.முறையான லிச்சவி ஆட்சியின் பெறுமதி வலியுறுத்தப்படுகிறது.

இந்தச் சூழல்கள் அனைத்திலும் மத்திய வங்கியின் ஆளுநரின் கூற்றுப்படி நாட்டில் ரூபா கையிருப்பு இல்லை.அத்தகைய பணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? என்ற கேள்வி எழுகிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் வந்தால், இலங்கைக்கு பெரிய அளவில் டாலர்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ராஜித சேனாரத்னவின் இந்த கூற்று எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதை தடுக்கும் பிரசாரம் என சில எம்.பி.க்கள் கூறுகின்றனர்.உணவு மற்றும் இன்ன பிற தேவைகளுக்கு பஞ்சம் நிலவி வருகிறது. இது மிகவும் பாரதூரமான நெருக்கடியாக இருந்தாலும், ரணிலின் நியமனம் குறித்து ஐ.தே.க.வும் பல எதிர்க் குழுக்களும் இன்னமும் பேசிக் கொண்டிருப்பது சோகம்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நான்கு குழுக்களை நியமித்தார்.மேற்கண்ட நான்கு குழுக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி குழு, மருந்து தட்டுப்பாடு விசாரணை குழு மற்றும் உர குழு ஆகும். கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார மற்றும் தலைவர் வஜிர அபேவர்தன ஆகியோர் அத்தியாவசிய உணவுகள் குழுவிற்கும், சாகல ரத்நாயக்க எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி குழுவிற்கும், ருவான் விஜேவர்தன, மருந்து குழுவிற்கும், அகில விராஜ் காரியவசம் உரம் தொடர்பான குழுவுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பிரதமரின் உடனடிப் பொறுப்பு, நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, இந்த நெருக்கடிகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து முன்மொழிவுகளைச் செய்வது. இதற்கிடையில், பிரதமர் தூதர்கள் குழுவையும் சந்தித்து பேசினார். பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க மற்றும் சீனத் தூதுவர்களும் கலந்துகொண்டனர். ஆனால், ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ளும் நெருக்கடி இன்னும் அப்படியே உள்ளது. அவர் ஒரேயடியாக அனைத்தையும் தீர்க்கும் அதிசயம் செய்பவர் அல்ல என்பது உறுதி.

ஆனால் நெருக்கடி முடிவுக்கு வரும் என்பதில் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது போல உள்ளது. எவ்வாறாயினும், இந்த நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், ரணில் விக்கிரமசிங்கவின் உப தயாரிப்புகளை முன்னிலைப்படுத்துவது, தீயை அணைக்க செல்லும் தண்ணீர் பவுசரை நிறுத்தி , போலீசார் ஓட்டுநரின் ஆவணங்கள் மற்றும் அவரது சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றை பரிசோதிப்பதற்கு ஒப்பானது என நினைக்கலாம்.

ஆனால் அவர் நாட்டைக் கட்டியெழுப்பத் தவறினால், யாரும் அவரை வீழ்த்த வேண்டிய அவசியம் இல்லை.

லசந்த வீரகுலசூரிய
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.