ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..

ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள 80 பேரை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அபாடானில் உள்ள 10 அடுக்கு கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது.

மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தொடர்ந்து, கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.