தகாத உறவு முரண்பாடு: பெண் வெட்டிக்கொலை!

புத்தளம், வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களப்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு குறித்து ஏற்பட்ட முரண்பாடொன்றின் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வண்ணாத்திவில்லுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.