’21’ திருத்தத்துக்கு வாசுவும் பேராதரவு..

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு முழுமையாக ஆதரவளிக்கப்படும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும், பதவிகள் வகிப்பதையும் தடுக்கும் ஏற்பாடு கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, புதிய பிரதமரைத் தெரிவு செய்த அணுகுமுறையைத் தமது கட்சி அனுமதிக்காது எனவும், அதனால்தான் அரசில் இணையவில்லை எனவும் ஊடகங்களிடம் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.