அமெரிக்க பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 21பேர் பலி (வீடியோ)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 பள்ளி மாணவர்கள் உட்பட 21 பேர் பலியாகினர்.

அவர்களில் ஆசிரியர் ஒருவரும் மேலும் இரு பெரியவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராப் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

18 வயதான சல்வடார் ரோலண்டோ ராமோஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக டெக்சாஸ் போலீசார் கூறுகின்றனர், அவர் கைத்துப்பாக்கி மற்றும் ரைபிள் ஒன்றை வைத்திருந்ததாக தெரவிக்கப்படுகிறது. பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 18 வயதுடைய சந்தேக நபர்  உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன் வீட்டில் இருந்த பாட்டியை ராமோஸ் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.                                                               

18 வயதான சால்வடார் ரோலண்டோ ராமோஸ்

பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்கள் 7 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தீவிரவாத செயலா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

18 வயது சால்வடார் ரோலண்டோ ராமோஸ் பள்ளி மைதானத்தில் துப்பாக்கியுடன் வரும் புகைப்படம்

Leave A Reply

Your email address will not be published.